நனைந்து போன காகிதத்தில்
கவிதை எழுத ஆசைப் பட்டேன்
நடக்கவில்லை !
கலைந்து போன கனவில்
உன் உருவத்தைத் தேடினேன்
கிடைக்கவில்லை !
கரைந்து போன மெழுகில்
திரி போட முயல்கிறேன்
முடியவில்லை !
விடிந்து விட்ட வானில்
நட்சத்திரங்களை
காண ஆசைப்பட்டேன்
தெரியவில்லை !
முடிந்து போன என் காதலில்
உன் நினைவுகளை
அசைபோட நினைத்தேன்....
ஆம்!
அவை மட்டும்
நாளுக்கு நாள் மெருகேறி
வளர்ந்து கொண்டே இருக்கின்றன....
நினைவுகள் சுகமானது!!
( காதல் தோல்வியடைந்தவர்கள் தவறான முடிவுகளைத் தேடிச் செல்வதை விட்டு விட்டு, நினைவுகளைத் தேடுங்கள். அந்த நினைவுகள் உங்களுக்கு வாழக் கற்றுக்கொடுக்கும். தோல்வியும் இன்பம் "காதலில் மட்டும்".)
கவிதை எழுத ஆசைப் பட்டேன்
நடக்கவில்லை !
கலைந்து போன கனவில்
உன் உருவத்தைத் தேடினேன்
கிடைக்கவில்லை !
கரைந்து போன மெழுகில்
திரி போட முயல்கிறேன்
முடியவில்லை !
விடிந்து விட்ட வானில்
நட்சத்திரங்களை
காண ஆசைப்பட்டேன்
தெரியவில்லை !
முடிந்து போன என் காதலில்
உன் நினைவுகளை
அசைபோட நினைத்தேன்....
ஆம்!
அவை மட்டும்
நாளுக்கு நாள் மெருகேறி
வளர்ந்து கொண்டே இருக்கின்றன....
நினைவுகள் சுகமானது!!
( காதல் தோல்வியடைந்தவர்கள் தவறான முடிவுகளைத் தேடிச் செல்வதை விட்டு விட்டு, நினைவுகளைத் தேடுங்கள். அந்த நினைவுகள் உங்களுக்கு வாழக் கற்றுக்கொடுக்கும். தோல்வியும் இன்பம் "காதலில் மட்டும்".)