கடவுள்: என்னது... கோவிலா? வழிபாடா?... அப்படியென்றால்?....
நான்: என்ன கடவுளே.... இது உங்களுக்கு தெரியாதா? இந்த உலகில் எத்தன எத்தனை உயரமான கோபுரங்களுடன் உங்களுக்காக கோவில்கள் கட்டப் பட்டிருக்கிறது...
கடவுள்: இல்லை மானிடா, நீ தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்! அந்தக் கோபுரங்கள் எனக்காக கட்டப் பட்டதில்லை. அதெல்லாம் இறந்து போன அவரவர் உறவினர்களுக்காக கட்டப் பட்டவை!
நான்: இல்லையே, அங்கு அவர்களுடைய உறவினர்களின் புகைப்படங்கள் மாட்டப் படவில்லை, மாறாக உங்கள் படங்கள் தான் மாட்டப் பட்டிருக்கிறது. எனவே அது நீங்கள் தான். அந்தக் கோவில்கள் உங்களுக்கானது தான். என்னை ஏமாற்றாதீர்கள்...
கடவுள்: மானிடா!... (கோபமாக...) நீ படித்தவன்... நான் படைத்தவன்! எனக்குத் தெரியாததா உனக்குத் தெரிந்துவிடும்... உன் கண்களைத் திறந்து என்னை நன்றாகப் பார்...!
நான்: கண்ணைத் திறந்தால் "கனவு" கலைந்து விடுமே கடவுளே...?!
கடவுள்: கிண்டல் செய்யாமல், என்னை நன்றாக உற்றுப் பார்! எனது புகைப்படமா அங்கு மாட்டப் பட்டிருக்கிறது?...
நான்: (கண்களை நன்றாகத் திறந்து பார்த்தேன்...) ஒண்ணுமே தெரியலையே கடவுளே..!?
கடவுள்: பிறகு எப்படி..., அங்கு இருப்பது நான் தான் என்று அடித்துச் சொல்லுகிறாய்?...
நான்: அட ஆமா....!, அதுக்கு ஏன் நீங்க என்னை அடிக்கிறீங்க?...
கடவுள்: பிறகு.... கண்ணைத் திறந்து பாருன்னு சொன்னா, கனவு கலைஞ்சிடும்ன்னு கிண்டலா பண்ணுறே... நான் திறக்கச் சொன்னது உன்னோட பார்வையை இல்லை, உன்னோட அறிவை!!!
நான்: இப்ப புரிஞ்சிடுச்சி கடவுளே.... அடிச்சி சொன்னாத் தான் புரியும் போல இருக்கு! சரி கடவுளே.... நான் உங்ககிட்ட கேட்கனும்ன்னே இருந்தேன். ஆமா... எதுக்காக எல்லாத்துக்குமே எதிர்ப்பதமா ஒண்ணை படைச்சிருக்கீங்க?
கடவுள்: எதிர்ப்பதம்-ன்னா?... எனக்குப் புரியிர மாதரி கேளு குயிலன்!
நான்: (Mind Voice) ம்கும்.... நான் பேசுறது மனுசங்களுக்குத்தான் புரியாதுன்னு நினைச்சேன்... உங்களுக்குமா புரியல?...
கடவுள்: உன்னோட Mind Voice எனக்குப் கேக்குது குயிலன்....
நான்: ஆம்! இதெல்லாம் கரைக்டா கேக்கும்... ஆனா, நான் சொல்லுறது மட்டும் புரியாதா?...
கடவுள்: எல்லாம் காரணமாத்தான் கேக்குறேன்... நீ சொல்லு..!
நான்: அதாவது... இப்போ, நல்லதுன்னு ஒண்ணு இருந்தா அதுக்கு நேர் மாறா கெட்டதுன்னு ஒண்ணு இருக்கு! இன்பம்ன்னு இருந்தா, துன்பம்ன்னு ஒண்ணு இருக்கு!
பகல்ன்னு இருந்தா.....
கடவுள்: (குறுக்கிட்டு..) கொஞ்சம் இரு மானிடா! நீ எதை நல்லதுன்னு சொல்லுறே? எதை கெட்டதுன்னு சொல்லுறே? முதல்ல... எது நல்லது? எது கெட்டது? அப்படின்னு நான் உனக்கு எப்ப சொல்லிக் கொடுத்தேன்?
நான்: ஆஹா.....! இதுல இப்படி ஒண்ணு இருக்கா?... (உடனே சமாளித்து....) ம்ம்.... நல்லா இருக்கு கடவுளே நீங்க சொல்லுறது... எல்லாத்தையும் உங்ககிட்டயே கேட்டுக்கிட்டு இருக்க முடியுமா? நீங்க எங்க இருக்கீங்கன்னு யாருக்குத் தெரியும்?... நான் மனுசங்க கூடத் தான் பேசுறேன், பழகுறேன், வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்... அப்போ மனுசங்க சொல்லுறதைத் தானே நான் நம்ப முடியும்?...
கடவுள்: உன்னோட பேச்சுத் திறமையால நீ என்னை மடக்கிட்டதா நினைச்சுக்காதே மானிடா...! மத்தவன் சொல்லுறதை அப்படியே நம்புறதுக்காகவா, நான் உனக்கு ஆறாவது அறிவைக் கொடுத்தேன்? நீ யாறுக்கிட்டா பேசி கிட்டு இருக்கேன்னு உனக்கு நியாபகம் இருக்கா?!
நான்: ஆ..ங்...! நான் ஒண்ணும் தப்பா கேக்கலையே... சரியாத்தானே சிந்திச்சி கேட்டுருக்கேன்?...
கடவுள்: ஆமா மானிடா, நீ சரியாத்தான் சிந்திச்சி கேட்டுருக்கே...! நீ கேட்டதிலேயோ, சிந்திச்சதிலேயோ எந்தத் தவறும் இல்லை. ஆனா, நான் உனக்கு ஆறாவது அறிவைக் கொடுத்தேன் பாரு... அதிலே தான் தவறு இருக்கு! ஆறாவது அறிவை நீ எப்படி பயன்படுத்திக் கிட்டு இருக்கேன்னு நினைக்கும் போது.... ஏண்டா, நாய்களுக்கும், கழுதைகளுக்கும் அந்த அறிவை கொடுக்காமல் போனேன்னு நினைச்சி, நான் ரொம்ப வேதனைப் படுறேன்.....
நான்: மன்னிச்சிடுங்க கடவுளே!....
கடவுள்: இல்லை மானிடா..., நீ உன்னோட ஆறாவது அறிவை பயன்படுத்தி, எப்படி வேனாலும் பேசலாம்! எதை, ஏதோட வேணும்னாலும் முடிச்சு போடலாம், உண்மையை பொய்'ன்னு சொல்லலாம்... பொய்'யை உண்மை'ன்னு சொல்லலாம்... எல்லாத்துக்கும் உதாரணம் காட்டி நிரூபிக்கலாம். ஆனால், அதனால என்ன பயன்....? அங்க தான் இருக்கு இந்த ஆறாவது அறிவோட வெற்றி! அதை நான் மனிதனுக்கு மட்டுமே கொடுத்திருக்கிறேன்...!
நான்: கடவுளே... கேக்குறேனேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க... மற்ற உயிரினங்களுக்கு, நீங்க ஏன் சிந்திக்கிற அறிவை கொடுக்க வில்லை?
கடவுள்: மற்ற உயிரினங்கள் சிந்திக்க வில்லை என்று யார் சொன்னது மானிடா..? இந்த வீடியோவை கொஞ்சம் பார்!
"
கடவுள்: புரிஞ்சுதா...? நான் எல்லா உயிரினங்களுக்கும் சிந்திக்கிற அறிவைக் கொடுத்திருக்கிறேன்.... ஆனால், மனிதனுக்கு மட்டுமே
"சிந்தித்து செயல்படுத்தக் கூடிய" அறிவைக் கொடுத்தேன். அது தான் ஆறாவது அறிவு!!!
இதை மனிதனுக்கு கொஞ்சம் அதிகமாவே கொடுத்தேன். நான் ஏன் உன்னை மாதரி மனிதனுக்கு மட்டும் இந்த ஆறாவது அறிவைக் கொடுத்தேன் தெரியுமா? மற்ற உயிரினங்கள் எல்லாம், சாப்பிடும்... தூங்கும்... இனப்பெருக்கம் செய்யும்! ஆனா, மனிதன் மட்டும் தான் புதுசு புதுசா எதையாவது உருவாக்குவான்!.... மனிதன் மட்டும் தான் மற்ற உயிரினங்களை அரவணைக்கிறான்!... அதனால தான் மனிதனுக்கு ஆறாவது அறிவைக் கொடுத்தேன்.
நான்: நான் எனது தவறை உணர்ந்து கொண்டேன் கடவுளே...
கடவுள்: தவறைக் கூட உணர வேண்டாம் மானிடா, உன்னை நீ உணர்ந்தால் போதும்! உன் வாழ்க்கையை சரியாக வாழ்ந்து, உன்னால் முடிந்ததை இந்த உலக மக்களுக்கு உணர்த்து! அதற்காக என்னைப் பற்றி பெருமை பேசிக் கொண்டிருக்காதே...
நான்: சரி கடவுளே... ஆனால், எங்கள் திருப்திக்காக, நாங்கள் உங்களுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து கொள்கிறோமே... அதில் என்ன தவறிருக்கிறது?
கடவுள்: உன்னை உருவாக்கியவன் நான்... நான் தான் உனக்காகக் கவலைப் பட வேண்டும். நீ பெருமை பேசியோ, நீ அர்ச்சனை செய்வதாலோ நான் உயர்வடையப் போவதில்லை. நான் உயரத்தில் தான் இருக்கிறேன். நீ உயரத்திற்கு வா! உன்னை நீ சுத்தப்படுத்திக் கொள்!! நீ எனக்கு பாலாபிஷேகம் செய்வது எப்படி தெரியுமா இருக்கிறது? உன் பெற்றோரை சாவடித்து சாமாதி செய்து, அதுதான் என் பெற்றோர் என்று சமாதிக்கு பாலாபிஷேகம் செய்வது போல் உள்ளது!! உன்னை வடிவமைத்தவன் நான். எனவே நீ என்னை சாதாரணமாக அடையாளப் படுத்தாதே!!
கடவுள் இல்லை என்று சொன்னால் உனக்கு எவ்வளவு ஆத்திரம் வருகிறது? உறவு, நட்பு என்று கூட பார்க்காமல் எத்தனை எடுத்தெறிந்து பேசுகிறாய்.... அப்படி இருக்கும் போது, நான் மகா சக்தி...! நான் பேரொளி...! நான் அண்டங்களை எல்லாம் ஆட்டுவிக்கும் அதிகாரத்தில் இருக்கிறேன்.... என்னை ஒரு சிறிய கல்லோடு ஒப்பிட்டுப் பார்க்கிறாயே?... வாழைப் பழத்திற்கும், தேங்காய்க்கும் நான் பிச்சை எடுப்பது போல் என்னை கேவலப் படுத்துகிறாயே?... அதைப் பார்த்து நான் எவ்வளவு ஆத்திரப் பட வேண்டும்? எவ்வளவு கொந்தளிப்பு அடைய வேண்டும்?...
பூகம்பங்களையும், சுனாமிகளையும் ஒரே நேரத்தில் உருவாக்கச் செய்துவிடாதே!! எனது பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கிறது... அந்த எல்லைவரை மட்டுமே உங்களுக்கு அனுமதி....!! எல்லையைத் தாண்ட முயற்சித்தால்
பூமியையே இரண்டாகப் பிளந்தெரிந்து விடுவேன்!! அதனால் யாருக்கு என்ன விளைவு என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்!!
நான்: கடவுளே!... அமைதி!... அமைதி..! சாந்தமாகுங்கள்!... எனது அறியாமையினால், உங்கள் கோபத்தை நான் தூண்டி விட்டேன்... இருங்கள்.. இருங்கள்... விபூதி, தேங்காய், பழம், கற்பூரம் கொண்டு வந்து உங்களை சாந்தப் படுத்துகிறேன்...!
கடவுள்: அடே... முட்டாள்!! நான் இதுவரை என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் என்று உனக்குப் புரிய வில்லையா?... மீண்டும் மீண்டும் அதையே செய்வேன் என்கிறாய்...?
நான்: ஐயோ...! கடவுளே....! மன்னித்து விடுங்கள்... மன்னித்து விடுங்கள்...! எனக்குத் தூக்கக் கலக்கமாக உள்ளது... அதனால் தான் இந்தத் தடுமாற்றம் என்று நினைக்கிறேன்... சரி கடவுளே... நாம் ஆரம்பத்தில் பேசியது போல் சாதாரணமாக பேசலாமா?
கடவுள்: தூங்கி வழியும் உன்னோடு நான் பேசத்தயாராக இல்லை!! நான் செல்கிறேன்...!
நான்: என்ன கடவுளே, அதற்குள் கோபித்துக் கொண்டீர்கள்!
கடவுள்: அதெல்லாம் நான் ஒன்றும் கோபம் கொள்ள வில்லை! என் கோபத்தைக் காட்டினால் நீ தாங்கமாட்டாய்! சரி... நீ நன்றாக தூங்கு, நாம் இன்னொரு நாள் பேசலாம்..!
நான்: ஆம்! சரி கடவுளே... எனக்கும் கொஞ்சம் கண்களை வாட்டத் தான் செய்கிறது... இந்த நிலையில் உங்களோடு பேசினால், நீங்கள் பார்த்திபன் போல் குண்டக்க மண்டக்க எதையாவது சொல்லி, என்னை ஆஃப் பண்ணி விடுவீர்கள். எனவே நானும் நன்றாகத் தூங்கி தெளிவாக வருகிறேன்... உங்களிடம் நிறைய பேசவேண்டும். உங்களால் படைக்கப் பட்ட நான் எத்தனை திறமையாகப் பேசுகிறேன் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?...
கடவுள்: அடக்குடா...! நான் உன்னைப் படைத்தவன்.!
நான்: (Mind Voice) அதைத் தானே நானும் சொன்னேன்... ஏன் அடக்கச் சொல்கிறார் இந்தக் கடவுள்..?
கடவுள்: ம்ம்....!
நான்: ஆங்! ஒன்றுமில்லை கடவுளே... நாம் நாளை பேசுவோம்... குட் நைட் !
கடவுள்: அது என்ன குட்டு... நைட்டு...?
நான்: எல்லாம் தெரியும்ன்னு சொல்ல வேண்டியது... அப்பறம் அது என்ன? இது என்ன? ன்னு என் வாயைப் புடுங்க வேண்டியது... அதாவது ராத்திரியில, தூங்கப் போகும் போது இப்படி சொல்லிக்கறது எங்களை மாதரி மனிதர்களோட வழக்கம். அதைத்தான் சொன்னேன்...
கடவுள்: அப்படியா? எனக்கு ராத்திரியும் இல்லை, பகலும் இல்லை. நீ தூ...ங்கு...! (என்று கூறி கடவுள் சென்று விடுகிறார்..)
நான்: ஆமா... நான் இதுவரைக்கும் கடவுளோடவா பேசிக்கிட்டு இருந்தேன்...? கடவுள் மனிதர்களோடு பேசுவாரா? ஒருவேளை... எனக்கு பைத்தியம் பிடிச்சிருக்குமோ...? இல்லைன்னா... நான்தான் கடவுளா இருப்பேனோ...? ஐயோ! கடவுள்ன்னு சொன்னா அப்புறம் புடிச்சி அரஸ்ட் பண்ணி உள்ள போட்டுடப் போறாங்க.... "எல்லாரும் கேட்டுக் கோங்க.... நான் கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுள் இல்லை...!!" ஐயோ! என்ன இது கடவுள் இல்லைங்கர மாதரி வருது.... அய்யய்யோ.. வம்பே வேண்டாம், "ஐயா, எல்லோரும் நல்லா கேட்டுக்கோங்க... நான்... என்னைப் பார்த்து... நான் கடவுள் இல்லைன்னு... என்னையே நான் சொல்லிக்கிட்டேன்...!!"
அப்பா.......டா.....!!
கடவுள் குரல்: தூங்குடா டேய்!...